தமிழகத்தில் ஆக.15ம் தேதிக்குள் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக திண்டுக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்பு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. கொரோனா ஊரடங்கால் தங்களின் வேலைகளை இழந்தவர்கள் வேலை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், தனியார் துறையில் பொருத்தமான வேலைவாய்ப்பைக் கண்டறிவதற்காக வாய்ப்புகளை தொழிலாளர் துறை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் குறைந்தபட்சம் 1 லட்சம் இளைஞர்கள் தனியார் துறையில் வேலை பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை, மொத்தம் 56 வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. ராயல் என்ஃபீல்டு, எம்ஆர்எஃப், ஃபாக்ஸ்கான் மற்றும் ஹூண்டாய் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்புகளை வழங்கினர்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரத்து செய்யப்பட்ட கார்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?
இந்த முகாம்களில் 3.70 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதில், 69,010 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. செங்கல்பட்டில் கடந்த முறை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 8,752 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வேலை வாய்ப்புகள் ரூ.10,000 முதல் ரூ. 31,000 வரையிலான சம்பள சலுகைகளும் வழங்கப்பட்டது. திண்டுக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.