தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு – பணபலன்களுக்கு பதில் பத்திரம்!
தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதனால் அவர்களுக்கு பணப் பலன்களுக்கு பதிலாக பத்திரம் வழங்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பல தரப்புகளில் இருந்து அரசுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
எதிர்ப்புகள்:
தமிழகத்தில் பொதுவாக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு கொரோன பெருந்தொற்றுக்கு இடையில் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து நடப்பாண்டிலும் பிப்ரவரி மாதத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்ட்டது. தற்போது திமுக தலைமையிலான ஆட்சியில் அரசு பணியாளர்களின் பணி ஓய்வு காலம் 58 ஆக குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜூலை 31 ஒலிம்பிக்கின் 8ம் நாள் போட்டிகள் – இந்திய வீரர்களுக்கான போட்டிகள் அட்டவணை!
மேலும், அரசு கருவூலத்தில் போதிய நிதியின்மை காரணத்தால் அரசு பணியாளர்கள் ஓய்வு பெரும் போது அவர்களுக்கு பணப் பலன்களுக்கு பதிலாக பத்திரம் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக அரசின் பல துறைகளை சேர்ந்த ஊழியர்களும் இந்த விவகாரம் தொடர்பாக பல முறை அரசுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளனர். அரசின் இந்த திட்டத்தால் பல தரப்புகளில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகின்றது.
TN Job “FB Group” Join Now
அரசு ஊழியர்கள் சங்கத்தினர், ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இது குறித்து தாங்களே அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஓய்வு கால பலன்கள் குறித்து அரசு எடுத்திருக்கும் முடிவிற்கு எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர். ஓய்வுக்கால பணப் பலன்களை நம்பி குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.