மின் வாரிய நிலுவைத்தொகை செலுத்த அவகாசம் நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு!!!
தமிழகத்தில் மின் வாரிய நிலுவைத் தொகை செலுத்த அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவினை வெளியிட்டு உள்ளது. அது குறித்த முழு தகுதிகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கொரோனா ஊரடங்கு :
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் நாளுக்குள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்தந்த மாநில அரசுகள் அவற்றின் தொற்றின் தன்மையினை பொறுத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தமிழகத்தில் தொற்றின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வந்ததனால் முதலில் இம்மே மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஆனால் அப்பொழுதும் வைரஸின் வேகம் குறையாததினால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆனது தற்போது வரும் 01.06.2021 அன்று வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழக மின் வாரியம் :
தமிழக மின் வாரியம் மற்றும் அதன் கீழ் செயல்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவற்றின் மூலம் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மின் வாரியம் மின்சாரம் தடைபடாமல் இருப்பதற்கான முழு வழிகளிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு ஒரு புதிய உத்தரவினை வெளியிட்டு உள்ளது. அதாவது உயர் அழுத்த மின் கட்டணம் மற்றும் நிலுவைத்தொகை ஆகியவற்றினை செலுத்த முன்னதாக மே 31 வரை அளிக்கப்பட்டு இருந்த அவகாசத்தினை தற்போது ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் மின் கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Kokkeri
Punya Bhoomi