தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?? அரசு தீவிர ஆலோனை!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சமீபத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தாக்கம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய் அதிக வேகத்தில் பரவியதால் அரசு ஊரடங்கு முடிவை அறிவித்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.
‘கற்போம் எழுதுவோம்’ திட்ட தேர்வர்களுக்கு பயிற்சி முகாம் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்!!!
மாணவர்கள் பாதிப்பு:
பாடங்கள் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டதால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். இந்நிலையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்திருந்ததால் ஜனவரி மாதத்தில் பள்ளிகள் முதல் கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திறக்கப்பட்டது. அடுத்தகட்டமாக பிப்ரவரி மாதத்தில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
கொரோனா இரண்டாம் அலை:
கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. சமீபத்தில் தஞ்சாவூர் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 58 மாணவிகள், ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்