தமிழகத்தில் 6 வகையான பூச்சி மருந்துகளுக்கு தடை – அரசாணை வெளியீடு!
தற்கொலைகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது தமிழகத்தில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
பூச்சி மருந்துக்கு தடை:
உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் மக்கள் தற்கொலை செய்கின்றனர். அதில் குறிப்பாக பூச்சி மருந்துகளை உண்டு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் தோராயமாக 2 லட்சம் பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை உண்டு தற்கொலை செய்வதாக ஆய்வறிக்கை தகவல்கள் தெரிகின்றன.
Follow our Instagram for more Latest Updates
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 2,40,000 பேர் பூச்சி மருந்துகளை உண்டு உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பூச்சி மருந்தால் மக்கள் உயிரிழப்பதை தடுக்கும் வகையிலும் தற்கொலைகளை குறைக்கும் நோக்குடனும் புதிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
குட் நியூஸ்.. இன்னும் 10 நாட்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. முதல்வர் வெளியிட்ட சூப்பர் செய்தி!
Exams Daily Mobile App Download
அதாவது அபாயகரமான அசிபேட், மோனோகுரோடோபாஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தமிழக தடை அரசு விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 2017 – 2018 ம் ஆண்டுகளில் அசிபேட், புரோபெனோபாஸ் போன்ற விஷத்தன்மை வாய்ந்த பூச்சி மருந்துகளை சாப்பிட்டு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக வேளாண் இயக்குனர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.