குட் நியூஸ்.. இன்னும் 10 நாட்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. முதல்வர் வெளியிட்ட சூப்பர் செய்தி!
அரசு ஊழியர்களின் ஒரே கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தான். தற்போது இமாச்சலப்பிரதேசத்தில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சுக்விந்தர் சிங் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமலாகும் என தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகள்:
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்றார். மேலும் தேர்தலில் அவர் அளித்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் முதல்வர் சுக்விந்தர் சிங் தேர்தலின் பொது அளித்த வாக்குறுதிகளில் முதல் 3 வாக்குறுதிகளை புதிய அரசு அமைந்த 10 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான ரூ.2000 வழங்கும் சூப்பரான திட்டம் – 13வது தவணை குறித்த முக்கிய அப்டேட்!!
Exams Daily Mobile App Download
அதில் முதல் கட்டமாக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில அரசு ஊழியர்களின் பல வருட கோரிக்கைகளில் ஒன்றாகும். அதனை தொடர்ந்து பெண்களுக்கு ரூ.1,500 உதவித் தொகை, 1 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பபடுத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகளும் 10 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.