விவசாயிகளுக்கான ரூ.2000 வழங்கும் சூப்பரான திட்டம் – 13வது தவணை குறித்த முக்கிய அப்டேட்!!
நாட்டில் விவசாயிகளுக்கான ரூ.2000 வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் 13வது தவணை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
PM Kisan:
இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டம் மத்திய அரசால் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளாக ரூ.2000 வீதம் 4 மாதங்களுக்கு ஒரு முறை என மொத்தமாக ரூ.6000 வரை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் சார்ந்த பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர்.
டிச.15 தமிழகத்தில் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? – உங்க ஊரும் இந்த லிஸ்ட்ல இருக்கா?
Exams Daily Mobile App Download
ஆனாலும் இந்த திட்டத்தில் வசதி படைத்தவர்களும் பயனடைவதாகவும் முறைகேடுகள் ஏற்படுவதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது இவர்களை கண்டறிந்து பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கும் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 13வது தவணை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் 13வது தவணைத்தொகை வருகிற ஜனவரி மாதத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.