தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணிகளில் சேர முடியாமல் பலர் வேலையில்லாமல் இருக்கின்றனர். அத்துடன் ஆசிரியர்கள் பணி நியமனம் உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தற்போது இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் நியமனம்
தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இதற்கு முன்னதாக 7 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று இருந்தது. அதன்படி முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுனர் உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக அரசு பள்ளிகளில் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது.
அதனால் இதனை விரைவாக வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்து பல குழப்பங்கள் உள்ளது. இதனை தெளிவுபடுத்த பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு இது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.