தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி? அரசு விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் மூன்றாம் அலை அச்சம் காரணமாக கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற நிலையே தொடரும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த மே மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் ஆடி மாதம் என்பதால் கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.
தமிழக ரேஷன் கடைகளில் மலிவு விலை சமையல் எண்ணெய், பருப்பு – டிசம்பர் வரை நீட்டிப்பு!
இந்நிலையில் இந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில், திரையரங்குகள் 50 சதவிகித பார்வையாளர்களுடன் செயல்படலாம் எனவும், செப்.1 முதல் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் பக்தர்கள் அனுமதி குறித்து எந்த அறிவிப்பும் அதில் குறிப்பிடவில்லை. இந்நிலையில் தற்போது ஏற்கனவே அறிவித்தது போல கோவில்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலங்கள் வார இறுதி நாட்களில் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறப்புக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என மருத்துவத்துறை, பேரிடர் நிர்வாகத்துறை தகவல் தெரிவித்துள்ளது.