தமிழக ரேஷன் கடைகளில் மலிவு விலை சமையல் எண்ணெய், பருப்பு – டிசம்பர் வரை நீட்டிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு வந்த சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு போன்றவை வழங்கப்படும் கால அளவை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில், புதிய அரசு ஆட்சி அமைத்த போது மாநிலத்தில் கொரோனா பரவல் என்பது அதிகமாக காணப்பட்டது. இதனை அடுத்து மக்களின் துயரை போக்க கொரோனா கால நிவாரண நிதியாக, நான்காயிரம் ரூபாயை இரண்டு தவணையாகவும், 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையையும் ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கியது.
IPL சூதாட்டம் – ரூ.100 கோடி கோரிய கேப்டன் தோனியின் மானநஷ்ட வழக்கு தள்ளிவைப்பு!
இதை பெற்ற மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த இந்த ஊரடங்கு காலத்தில் இந்த திட்டம் தங்களுக்கு மிகுந்த பலனை அளித்ததாக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இதோடு சேர்த்து மக்களுக்கு கூடுதலாக மானிய விலையில் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு போன்ற பொருட்களும் வழங்கப்பட்டு வந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால் இந்த திட்டம் முடிவுக்கு வரும் தருவாயில் இருந்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் தற்போது தமிழக அரசு தாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதுவரை மக்களுக்கு குறைந்த விலையில் ரேஷனில் வழங்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு ஒரு கிலோ போன்ற பொருட்களின் சிறப்பு பொது விநியோக திட்டமானது வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் நுகர்வோர்களான மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.