தமிழக அரசின் பத்திரப்பதிவு கட்டணங்களை இனி இ-சேவை மூலமாக செலுத்தலாம்!
தமிழகத்தில் இனி பத்திரப்பதிவுகளுக்கான கட்டணத்தை இ-சேவை மூலமாக செலுத்தலாம் என்று அரசுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இடைத்தரகர்கள் மூலமாக மக்கள் அவதிப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் அலுவலகம்:
தமிழகத்தில் மொத்தமாக 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் நிலம், வீடு அல்லது விளை நிலம் ஆகியவை பத்திரபதிவு செய்யப்படும். இப்படியாக இருக்க, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இ-சேவை வாயிலாக பத்திரப் பதிவினை செய்யும் வசதி செய்து தரப்பட்டது. இருந்தும், பலர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்காமல் இடைத்தரகர்களையே நாடுகின்றனர்.
தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை அமைச்சர்!
இவ்வாறாக ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் போது தங்களது வங்கி கணக்கில் இருந்து தான் பணத்தினை செலுத்த வேண்டும். இதனால் பல இடைத்தரகர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தினை செலுத்துவதால் கூடுதலாக கமிஷனுடன் பணத்தினை மக்களிடம் வசூலிக்கின்றனர் என்ற புகார் எழுந்து வந்தது. இதனை தடுக்கும் விதமாக தற்போது நேரடியாக மக்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தினை அனுப்ப அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அனைவருக்கும் அறிவுறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் அறிவிப்பு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்திய கிருத்தவ திருமண சட்டத்தின் கீழ் திருமண சான்றிதழின் நகலை பெற அனைவரும் சென்னையில் உள்ள பதிவாளர் அலுவலகத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அந்தந்த மண்டல டிஐஜிக்கள் அலுவலகத்திலேயே பெற வழிவகை செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.