தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை அமைச்சர்!
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நோய் பரவலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 2021 ஜனவரி மாதத்தில் தொற்று சற்று குறைந்த போது பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.
ஜூலை 7 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புதிய கல்வியாண்டும் தொடங்கியுள்ளது. அதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு மாணவர்கள் சேர்க்கையை தொடங்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் ஜூலை 30ம் தேதி வெளியாகும். எனவே அதன் பிறகு கல்லூரிகளில் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும், பொறியியல் கல்லூரிகளில் வழக்கமான சேர்க்கை முறை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார். கல்லூரியில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ஏற்கனவே உள்ள சலுகைகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.