தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்.13 இல் நிறைவு – சபாநாயகர் அறிவிப்பு!
2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தொடர் செப்டம்பர் 21ம் தேதி முடிவடையும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில், முதல் முறையாக 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண்மைத் துறைக்கென முதன்முதலில் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
2 டோஸுக்கு மேல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது – மத்திய அரசு!
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரண்டும் காகிதமில்லா இ-பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடர் செப்டம்பர் 21ம் தேதி முடிவடையும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்திய நிகழ்ச்சி நிரல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
18.08.2021 ம் தேதி தொடங்கி 13.09.2021 ம் தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமானது அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் செயல்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் இதில் நீர்வளத்துறை, உயர் கல்வித்துறை,பள்ளி கல்வித்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தமிழ் வளர்ச்சி, மாற்று திறனாளி நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா, செய்தி மற்றும் விளம்பரம், கைத்தறி மற்றும் துணிநூல், போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, காவல் துறை போன்றவை குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.