தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – அதிகாரிகள் விளக்கம்!
தமிழகத்தில் ஆரம்பத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வரை 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல பொது தேர்வுகள் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பொதுத்தேர்வு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2 வருடங்களாக 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2021 – 2022ம் கல்வியாண்டில் கொரோனா தாக்கம் சற்று குறைந்ததும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தினசரி பாடங்கள் நேரடி முறையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த நேரத்தில் பொதுத்தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த மே 5ம் தேதி 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழக ஆசிரியர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – அமைச்சர் தகவல்!
தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த கல்வி ஆண்டு (2022 – 2023) வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலில் தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு 11ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு 2018 ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில கல்வி கொள்கை கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனைடுத்து 11ம் வகுப்பு பொதுதேர்வு ரத்து என்ற தகவலை கல்வித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும் மாநில கல்வி கொள்கை கூட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.