தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை – தேர்வு துறை வெளியீடு!!
தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு துணைத் தேர்வு அட்டவணையை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வுகள் செப்டம்பர் 16ஆம் தேதி முதலும், 11ஆம் வகுப்பு தேர்வுகள் செப்டம்பர் 15ஆம் தேதி முதலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
துணைத்தேர்வு அட்டவணை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் கடந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோவிற்கு திடீர் திருமணம் – வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!!
12ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கும், தனித்தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கும் தற்போது ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையை தற்போது தேர்வு துறை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி, தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில், 10 ஆம் வகுப்பு துணை தேர்வு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 7-ம் தேதி (இன்று) முதல் ஆகஸ்ட் 11-ம்தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதற்கான தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வு கால அட்டவணை, தங்கள் விண்ணப்ப முறை குறித்த கூடுதல் விவரங்கள் http://www.dge.tn.gov.in என்ற தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.