தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை!

0
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை!

கொரோனா நோய் பரவலின் 3வது அலை வர இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதால் அடுத்தகட்ட ஊரடங்கு விதிமுறைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவுக்கு வருவதால் அடுத்தகட்ட ஊரடங்கு விதிமுறைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். மேலும் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸான ஒமைக்ரான் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

BSNL நிறுவனத்தின் 300 ரூபாய்க்கும் குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் – 10 ஜிபி டேட்டா! முழு விபரம் இதோ!

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய விமானங்கள் தரையிறங்கும் விமான நிலையங்களில் பயணிகளை பரிசோதிக்க மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைனில் ஆதாரை இணைப்பது எப்படி?நவ.30 கடைசி நாள்!

தென் ஆப்பிரிக்கா, சீனா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி ஆகிய வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்க பரிசோதனை மேற்கொண்டு அறிகுறி ஏதும் ஏற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. அத்துடன் தென் ஆப்ரிக்காவிலிருந்து வரும் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் மக்கள் மத்தியில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால் ஆரம்ப கால கட்டத்தில் இந்த வைரஸை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!