ரூ.50,000/- ஊதியத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி வாகன சீராளர் (Van Cleaner) பணிக்கான இடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 05.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள், எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் (Van Cleaner) பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடல் தகுதி உடையவராகவும் இருக்க வேண்டும்.
- Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.07.2021 நாள் கணக்கின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் BC / MBC பிரிவினருக்கு 02 ஆண்டுகளும், SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு நிலை 1 படி குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
PRD விண்ணப்பிக்கும் முறை:
Van Cleaner பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பெற்று பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (05.05.2022) மாலை 5.00 மணி வரை மட்டுமே கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.