திருப்பதியில் செப்.27 பிரம்மோற்சவ விழா – ஏற்பாடுகள் தீவிரம்! கூடுதல் பேருந்து இயக்கம்!

0
திருப்பதியில் செப்.27 பிரம்மோற்சவ விழா - ஏற்பாடுகள் தீவிரம்! கூடுதல் பேருந்து இயக்கம்!
திருப்பதியில் செப்.27 பிரம்மோற்சவ விழா - ஏற்பாடுகள் தீவிரம்! கூடுதல் பேருந்து இயக்கம்!
திருப்பதியில் செப்.27 பிரம்மோற்சவ விழா – ஏற்பாடுகள் தீவிரம்! கூடுதல் பேருந்து இயக்கம்!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் செப்டம்பர் 27ம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளதால் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநில அரசு சார்பாக கூடுதல் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி விழா

திருப்பதியில் செப்டம்பர் 7ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அன்றைய தினம் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்கள் அதன் பிறகு அக்டோபர் 1ம் தேதி கருடசேவை, 2ம் தேதி தங்கத் தேரோட்டம், 4ம் தேதி தேர் திருவிழா, 5ம் தேதி சக்கர ஸ்தானம் என தொடர்ந்து விழாவானது அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த 2020,2021 ம் ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடைபெறவில்லை.

தமிழக காவல்துறையினருக்கான முக்கிய உத்தரவு – உயர்நீதிமன்றம் வெளியீடு!

இந்த ஆண்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு தற்போது தேவஸ்தான நிர்வாகம் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் 5,000 காவலர்களை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கணிக்கணிப்பு செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து பக்தர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 300 அரசு பஸ்கள் இயக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக 40 பேருந்துகளை இயக்கப்பட உள்ளது. இதனையடுத்து திருமலை, சித்தூர், காளஹஸ்தி, புத்தூர், கூடூர், வெங்கடகிரி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் ழுது நீக்கி புதுப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு தடுப்பூசிகள் அல்லது 72 மணி நேரத்திற்கு உள்ள கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுத்து வர வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!