தமிழக காவல்துறையினருக்கான முக்கிய உத்தரவு – உயர்நீதிமன்றம் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மதுரையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடாது என போலீசார் தொந்தரவு செய்வதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பால் கடை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு, கடைகள் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டது. இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 28) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
இதனை தொடர்ந்து, தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து துறைகளும் வழக்கம் போல செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன்படி கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் பால் கடையை 24 மணி நேரம் செயல்பட அனுமதிக்காமல் போலீசார்கள் தொந்தரவு செய்வதாக புகார்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சிவராஜா என்பவர் வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுத்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அத்துடன் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பால் கடைகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இதற்கு போலீசார் எந்தவித தொந்தரவும் செய்ய கூடாது என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்