திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – பிப்.15 முதல் நேரடி இலவச தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவசமாக தரிசன செய்ய அடுத்த மாதத்திற்கான 10 ஆயிரம் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டது. இதையடுத்து அடுத்த மாதம் 15ம் தேதிக்கு பிறகு தொற்று பரவல் குறைந்தால் சில தளர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான்
இந்தியா முழுவதும் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் தொற்று மேலும் பரவமால் இருக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
IPL 2022: CSK அணிக்கு விளையாட விரும்பும் RCB வீரர் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
மேலும் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக புகழ்பெற்ற கோவிலாகும். அதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர். பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் முடிவில் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை பெற்றிருப்பவர்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஞாயிறு கடைகள் உண்டு!
இதனை தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலான இலவச தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டது. இதனை வெளியிட்ட 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டனர். இந்த நிலையில் அடுத்த மாதம் 15ம் தேதிக்கு பின் கொரோனா பரவல் குறையும் என்று நிபுணர்கள் குழுவினர் தகவல் அளித்துள்ளனர். அதனால் பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் நேரடியாக இலவச தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டு உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.