தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஞாயிறு கடைகள் உண்டு!
தமிழ்நாட்டில் ஜனவரி 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான நாளை அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் செயல்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் மத்திய மாநில அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மாதம் தோறும் அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடும்ப தலைவர்களின் வருமானத்தின் அடிப்படையில் குறியீடு இடப்பட்ட 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளது. இவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் PHH என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை குடும்ப அட்டை ஆகும். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைத்தார்களுக்கு 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
தமிழக அரசு பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தினசரி 200 குடும்பங்கள் வீதம் டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி 4ம் தேதி தொடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி பொங்கல் பண்டிகை வரை நடைபெற்றது. விடுபட்டவர்கள் பண்டிகை முடிந்து பொருட்களை வாங்கி சென்றனர். மாத தொடக்கத்திலேயே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கியதால் மாதாந்திர அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை அன்று பொருட்களை விநியோகிக்க முடியவில்லை.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை – ரேஷன் கடை பணியாளர்கள் அதிர்ச்சி!
தற்போது அரசு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்துள்ளது. அதனால் ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்களை விநியோகிக்க நாளை ஜனவரி 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது. மேலும் நடப்பாண்டில் ரேஷன் கடைகளுக்கான விடுமுறை நாட்களையும் அரசு அறிவித்துள்ளது.