வார இறுதியால் நாளை (மார்ச் 26) சிறப்பு ரயில் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பொதுமக்கள் வார இறுதி நாட்களில் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில்
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். அதனால் பயணிகளுக்கு வசதியாக சென்னைக்கு செல்ல திருநெல்வேலி – தாம்பரம் என்ற சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் நாளை (மார்ச் 26) மாலை 6.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.35 மணிக்கு மதுரைக்கு வந்தடைகிறது. இதையடுத்து, மதுரையில் இருந்து 8.40 மணிக்கு புறப்பட்டு நாளை மறுநாள் (மார்ச்.27) காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த ரயில் ஆனது மொத்தம் 16 பெட்டிகளை கொண்டுள்ளது. இதில் மாற்று திறனாளிகளுக்கான 2ம் வகுப்பு பொதுப்பிரிவில் 2 பெட்டிகளும், அத்துடன் குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கையுடன் கூடிய பிரிவில் 2 பெட்டிகள், 2ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட 2 பெட்டிகளும் இடம்பெற்றுள்ளது. இதே போல் இரண்டாம் வகுப்பு பொதுப்பிரிவில் 4 பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download