ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சிறைவாசிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கொரோனா காலத்தில் விடுவிக்கப்பட்ட சிறைவாசிகள் தற்போது 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறைவாசிகள்
நாட்டில் கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் அதிகமாக பாதிப்பு ஏற்படுத்திய கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த நிலையில் சிறைகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளுக்கு உயர் அதிகார குழுவால் ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3184 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பொன்முடி தகவல்
மேலும் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் மறு உத்தரவு வரும் வரை சரணடைய வேண்டும் என அறிவிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு கவனித்து வருகிறது. கொரோனா காலத்தில் விடுவிக்கப்பட்ட சிறைவாசிகள் அனைவரும் இன்னும் 15 நாட்களுக்குள் சிறையில் சரணடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Exams Daily Mobile App Download