தமிழகத்தில் இன்று (மார்ச் 25) முதல் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் இன்று (மார்ச் 25) முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை
தமிழகத்தில் கோடைகாலமாக இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்கிறது. அந்த வகையில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. அதனால் இன்று (மார்ச் 25)தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கோயம்பத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தேனி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், கரூர், ராணிப்பேட்டை, திருச்சி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதியால் நாளை (மார்ச் 26) சிறப்பு ரயில் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மேலும் மார்ச் 26 ஆம் தேதி தமிழநாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, மார்ச் 27 மற்றும் மார்ச் 28 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல, மார்ச் 29 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download