TN TET தேர்விற்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு – வலுக்கும் கோரிக்கை!
பி.எட் முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வினை நடத்தி வருகிறது. இந்தாண்டும் ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பு மார்ச் 7 ஆம் தேதி வெளியானது. தகுதியான விண்ணப்பதாரர்கள் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பி.எட் முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத காரணத்தினால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களால் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு பதிவு செய்ய முடியவில்லை.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 முதல் கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் எந்த தகுதி தேர்வும் நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் தேர்வு நடக்க இருக்கும் நிலையில் பலரால் தேர்வினை எழுதமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எப்போதும் ஆசிரியர் தகுதி தேர்விற்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பர். ஆனால் இந்தாண்டு 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
சர்வர் பிரச்சினையாலும், கால அவகாசம் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை தான் கொடுக்கப்பட்டதாலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் பி.எட் முதலாமாண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களை கருதி கொண்டாவது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.