1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 முதல் கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு முடிவடைய உள்ள நிலையில் 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நாடு முழுவதும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு வழக்கம் போல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெத் தொடங்கியது. ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு தொற்று அச்சத்தால் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருவதால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த அனைத்து மாநில பள்ளிகல்வித்துறையும் திட்டமிட்டது.
மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல் – அரசின் முக்கிய உத்தரவு!
இதனையடுத்து முதல் கட்டமாக மத்திய கல்வி வாரியம் (CBSE) பொதுத்தேர்வை இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு முதல் கட்ட பொதுத்தேர்வை குறைந்த பாடத்திட்டங்கள் அடிப்படையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் நடத்தியது. அதனை தொடர்ந்து மாநில அரசுகளும் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது. அதன் படி தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் பிற வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
தற்போது ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கிய தேர்வு மே 4ஆம் தேதி முடிவடையுள்ள நிலையில் 1-9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கோடை விடுமுறை விடப்பட உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திராவை போலவே தமிழகத்திலும் மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.