டிக்டாக் சூர்யாதேவி தற்கொலை வீடியோ; ஃபேனில் தொங்கிய தூக்கு கயிறு – போலீசார் கடும் அதிர்ச்சி!
யூ-டியூப் ல் பிரபலமாக உள்ள டிக்டாக் சூர்யாதேவி தான் தற்கொலை செய்து கொள்வதாக போலீசாருக்கு வீடியோ ஒன்றை அனுப்பி விட்டு செய்த செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
டிக்டாக் சூர்யாதேவி:
தற்போது சினிமா பிரபலங்களை விட அதிக பிரபலம் அடைந்து வரும் யூ-டியூப் துறையில், அவ்வப்போது சில அதிர்ச்சி சம்பவங்களும் நடந்து வருகிறது. டிக் டாக் ல் வீடியோ பாடல்களுக்கு நடனமாடி அதன் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டவுடன் இவர்களின் கவனம் அனைத்தும் யூ-டியூப் பக்கம் திரும்பியது. இவர்கள் தனித்தனி சேனல்களை தொடங்கி உள்ளனர்.
300 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு ஆதரவு – மத்திய அரசின் புதிய திட்டம்!
அதில் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் சண்டையிட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் நடிகை வனிதாவை திட்டி வீடியோ வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த டிக்-டாக் சூர்யாதேவி. மேலும், இது போல் பல சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர் மீது மதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதுரை போலீஸ் கமிஷனருக்கு வீடியோ ஒன்றை சூர்யாதேவி அனுப்பியுள்ளர்.
TN Job “FB Group” Join Now
அதில், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். போலீசார் அதிர்ந்து உடனடியாக சூர்யாதேவியின் வீட்டிற்குச் சென்று நீண்டநேரம் அவரது வீட்டுக் கதவைத் தட்டினர். அதிக நேரம் கதவை திறக்காததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் பார்த்தனர். அப்போது, வீட்டில் இருந்த மின் விசிறியில் வேஷ்டி ஒன்றை தூக்கு மாட்டிக் கொள்வது போல் வைத்து விட்டு காவல்துறையினர் வந்தது கூட தெரியாமல் சூர்யா தேவி தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் போலீசார் அவருக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளனர்.