300 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு ஆதரவு – மத்திய அரசின் புதிய திட்டம்!
தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான பல வகையிலான உதவிகளையும் செய்து அவர்களை ஆதரிக்கும் வகையிலான புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்க திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டம்:
இந்தியாவில் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இருக்கிறது. இதன்மூலம் பல ஆயிரக்கணக்காக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் போதிலும், நாட்டின் ஜிடிபி விகிதம் அதிகரிப்பது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம் தான் அதிகரிக்கும். இதனால் அதிக அளவினாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்படுகிறது. தற்போது, நாட்டில் ஓலா, ஸ்விக்கி, உபெர், பர்ஸ்ட், சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் பிரபலமாக உள்ளது. இந்த நிறுவனங்களின் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஓணம் பண்டிகை தளர்வுகள் எதிரொலி?
இதனால் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை நாடு முழுவதும் உருவாக்கி வருகின்றன. இதனால் ஸ்டாப்ட் அப் இந்திய நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. இதுவரையில் இந்த நிறுவனங்களின் மூலம் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி வசதி, வழிகாட்டுதல், சந்தை அணுகல் ஆகியவற்றை வழங்கி ஆதரவு தெரிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 7,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், யுனிகார்ன் நிறுவனங்கள் என அழைக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் 100, ‘யுனிகார்ன்’ நிறுவனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒரு நிறுவனத்தை உருவாக்க தேவையான யோசனையை திறன்களாக மாற்றுவதற்கு சிரமப்படும் நிறுவனங்களுக்கு உதவுவதே இந்த நோக்கம் என்று கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 40 லட்சம் ரூபாய் வரையிலான நிதி உதவியும், வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.