தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் – திமுக அறிவிப்பு!
திமுக கட்சியின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் முப்பெரும் விழா விருது நிகழ்ச்சிகளில், இந்த ஆண்டிற்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளியிட்டுள்ளது.
விருதுகள் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் முக்கியமான ஒன்றாக திகழும் திமுக கட்சி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று முப்பெரும் விழாவை நடத்தி வருகிறது. இந்த விழாவில் திமுக கட்சியின் முன்னாள் முதல்வர்களும், அரசியலின் முக்கிய புள்ளிகளான பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று முப்பெரும் விருதுகள் விழா நடைபெறவுள்ளது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இந்த விழாவில் 2021 ஆம் ஆண்டுக்கான விருதுகள் சில முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக திமுக அரசு அறிவித்துள்ள தகவலின் கீழ், ‘தமிழக திமுக கட்சியின் சார்பில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் நடைபெற உள்ளது. அதன் கீழ் மிசா பி.மதிவாணன் அவர்களுக்கு பெரியார் விருதும், எல்.மூக்கையா அவர்களுக்கு அண்ணா விருதும் வழங்கப்பட உள்ளது.
செப்டம்பர் இறுதியில் அமெரிக்கா பறக்கும் பிரதமர் மோடி? UN பொதுக்குழு கூட்டம்!
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வேணு என்பவருக்கு கலைஞர் விருதும், வாசுகி ரமணன் என்பவருக்கு பாவேந்தர் விருதும், பா.மு.முபாரக் என்பவருக்கு பேராசிரியர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது பிறந்தநாளையொட்டி இனி ஆண்டுதோறும், ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.