சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்க அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை மாவட்டத்தில் நோய்த்தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து வியாபாரிகள் அளித்த மனுவின் அடிப்படையில் தளர்வுகளை வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள்:

நாடு முழுவதும் முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடியது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டது. இரண்டாம் அலையை தொடர்ந்து கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் நோய் தாக்கம் அதிகரித்து வந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நோய்த்தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது. அதன் காரணமாக கோவை மாவட்டத்தில் வார இறுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

செப்டம்பர் இறுதியில் அமெரிக்கா பறக்கும் பிரதமர் மோடி? UN பொதுக்குழு கூட்டம்!

கோவை மாவட்டத்தில் நோய்த்தாக்கத்தினை குறைக்க வார இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து, காய்கறி கடைகள் ஆகியவற்றை தவிர மற்ற கடைகள் சனி, ஞாயிறுகளில் திறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து உணவக, பேக்கரி உரிமையாளர்கள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் சனி, ஞாயிறுகளில் தளர்வுகள் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இது குறித்து கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல அனுமதி – ஆளுநர் அறிவிப்பு!

“கிராஸ் கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் வரை, ஹோப் காலேஜ் சிக்னல் கடைகள், காளப்பட்டி சாலை, டி.பி.ரோடு, திருவேங்கடசாமி ரோடு, என்.எஸ்.ஆர்.ரோடு, ஆரோக்கியசாமி ரோடு கிழக்கு, மேற்கு கடைகள், சரவணம்பட்டி சந்திப்பு, கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூர் சந்திப்பு மார்க்கெட் கடைகள், பீளமேடு ரொட்டிக் கடை மைதானக் கடைகள், காந்தி மாநகர் சந்திப்பு, ஆவாரம்பாளையம் சந்திப்பு, பாரதி நகர், பாப்பநாயக்கன்பாளையம், ராஜ வீதி, பெரிய கடை வீதி, வெரைட்டிஹால் ரோடு, என்.ஹெச்.ரோடு, இடையர் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவார்பேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுடர் வீதி, காந்திபுரம் ஒன்று முதல் 11 வரையிலான தெருக்கள், சலீவன் வீதி ஆகிய இடங்களில் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் (பல்பொருள் அங்காடிகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் நீங்கலாக) ஆகியவை சனி மற்றும் ஞாயிறுகளில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேற்கண்ட தெருக்களில் உள்ள இதர கடைகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட தடை தொடரும்.

மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவகங்கள், பேக்கரிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கண்ட இடங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கடைகளும் கட்டாயம் அரசு வெளியிட்டுள்ள கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!