பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல அனுமதி – ஆளுநர் அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நாள் கொண்டாட்டங்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் வைரஸ் கட்டுப்பாடு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கணிசமாக குறைந்தாலும் பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இணைய வங்கி சேவைகள் நிறுத்தம்!
புதுச்சேரியில் கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை தெருக்களில் நிறுவி அது மூன்றாவது நாள் மேள தாளங்களுடன் சென்று கடற்கரையில் கரைக்கப்படும். இதனால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளை திறந்ததால் அதிகரிக்கும் கொரோனா? அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது போல, புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அனுமதி அளித்துள்ளார். மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவினை கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.