இந்திய ஐடி நிறுவனங்களின் கதி இது தான்? ஷாக் தகவல்!
ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் தற்போது மந்த நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் வரைக்கும் மிதமான வளர்ச்சியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்கள்
கொரோனா கால கட்டத்திற்கு பிறகே டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எட்ட ஆரம்பித்துவிட்டன. இதனால், இந்த இரண்டு ஆண்டுகளுமே ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பணி உயர்வு முதலான சலுகை வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்ல துவங்கிவிட்டதால் இந்தியா முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்களுக்கான டிமாண்டு குறைய துவங்கிவிட்டது.
மேலும், இந்தியாவின் மிக பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனம் தங்களது மொத்த வருவாயில் 80-90% அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தைகளை தான் நம்பி இருக்கிறது. மேலும், இந்திய ஐடி நிறுவனங்கள் மந்தமான மற்றும் அதிகப்படியான மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. மேலும், பெரிய அளவிலான வர்த்தக மற்றும் வருவாய் பாதிப்புகளையும் சமாளிக்க வேண்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் – தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்! விளக்கமளிக்க உத்தரவு!
இத்தகைய பிரச்சனைகளுக்கு நடுவிலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் மந்தநிலையால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை காட்டிலும் லாபம் தான் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022 ஆம் நிதியாண்டில் மட்டுமே இந்திய ஐடி நிறுவனங்கள் 19 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதே போல அடுத்த இரண்டு ஆண்டுகளும் மிக பெரிய வளர்ச்சி இல்லாமல் ஓரளவுக்கு மிதமான வளர்ச்சி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்