தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் – தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்! விளக்கமளிக்க உத்தரவு!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் - தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்! விளக்கமளிக்க உத்தரவு!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் - தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்! விளக்கமளிக்க உத்தரவு!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ் – தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடல்! விளக்கமளிக்க உத்தரவு!

தமிழக அரசு பள்ளிகளில் 11 ம் வகுப்புகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் விளக்கம் அளிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிற்கல்வி பாடம்:

தமிழகத்தில் 11 வகுப்புகளுக்கு தொழிற்கல்வி பாடப்பிரிவு கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு ஆகிய காரணங்களால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே இப்பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவை அடுத்து கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல்லில் 18 பள்ளிகளில் பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு எழுத்துப்பூர்வமான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நலிவடைந்த குடும்ப மாணவர்கள் படிக்கும் படிப்புகளை பள்ளிக்கல்வித்துறை மூடி உள்ளது. பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடும் முடிவை கைவிடுமாறு ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தொழிற்கல்வியில் 11ம் வகுப்பு மாணவர்களை கட்டாயப்படுத்தி பிற பாடப்பிரிவுக்கு மாற்றுவது வருந்தத்தக்க செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – 7,219 பேர் பாதிப்பு!

மேலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவினால் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி பாடங்கள் நடத்த வேண்டும் . இத்தனை காரணம் காட்டி அதற்காக மாணவர்களை வேறு பிரிவுகளுக்கு மாற்றி தொழிற்கல்வி பிரிவையே மூடுவது கல்வி வளர்ச்சிக்கு ஆபத்தானது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை குறித்து, உரிய விவரங்களை அரசுக்கு தாக்கல் செய்யுமாறும், பள்ளி கல்வி ஆணையர் விளக்கம் அளிக்குமாறும், பள்ளிக் கல்வி துறை செயலர் மற்றும் முதல்வர் அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!