திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஜூன் 26 வரை தடை – கொரோனா எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் கிரிவலம் செல்ல ஜூன் 24ம் தேதி முதல் 26 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. எனவே அரசு அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. ஜூன் 7 வரை முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு ஜூன் 28 வரை நீடிக்கப்பட்டுள்ளன. மேலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? விரைவில் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி கிரிவலத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் நடைபெறும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக மக்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே போல இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஜூன் 24ம் தேதி முதல் 26 வரை திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.