தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? விரைவில் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், விரைவில் பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவ தொடங்கியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அதன்பிறகு, கோடை விடுமுறை முடிவடைந்து புதிய கல்வியாண்டு கடந்த வாரம் முதல் தமிழகத்தில் தொடங்கப்பட்டு விட்டதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகள் அளித்து அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
கொரோனா பாதிப்புகள் குறையாமல் தொடர்ந்து பரவி வரும் 11 மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மற்ற தளர்வுகள் ஏதும் இந்த மாவட்டங்களில் அறிவிக்கப்படவில்லை. இன்று முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள ஒரு சில மாநிலங்களில் ஜூலை மாதம் முதல் பள்ளிகள் திறப்பதற்கு அரசுகள் முடிவெடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்திலும் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனையின் போது அரசு, தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் முதலில் பள்ளிகள் திறப்பது, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் துவக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு வகுப்புக்கான நேரடி வகுப்புகள் துவங்குவது, மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்துவது போன்ற அம்சங்களை கையாளும் என்று தெரிவிக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பது பற்றிய அரசின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
பள்ளிகளுக்கு எப்பொழுது விடுமுறை அளிப்பார்கள் என்ற நிலைமை மாறி பள்ளிகள் எப்பொழுது திறப்பார்கள் என்ற நிலைமை மாறியுள்ளது