உலகிலேயே மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு – ஏலம் விட முடிவு!
உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 1,098 காரட் ஆகும்.
பெரிய வைரம்:
உலகத்திலேயே பெரிய வைரக்கல் தென் ஆப்ரிக்க நாட்டில் 1095ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அளவு 3,106 காரட் ஆகும். அதன் பின்னர் இரண்டாவது பெரிய வைரம் ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் 2015ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அளவு 1,109 காரட் ஆகும். இந்நிலையில் தற்போது மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!
ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் 1,098 காரட் அளவு கொண்ட உலகத்திலேயே மூன்றாவது வைரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனுடன் உள்ளது. இந்த வைரத்தை டப்ஸ்வானா என்ற நிறுவனம் அரசு துணையுடன் கடந்த 1ம் தேதி கண்டுபிடித்தது.
TN Job “FB Group” Join Now
இந்த வைரம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாக உள்ளது. உலகளவில் கொரோனா பரவல் தாக்கம் அதிகமாக உள்ளதால் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் இந்த வைரம் ஏலம் விடப்பட உள்ளதாக போஸ்வானா அரசு தெரிவித்துள்ளது. வைரத்தை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தை கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.