புதிதாக ரேஷன் கார்டு பெற “இவை” கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப் பொருள்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரேஷன் அட்டைகளில் சலுகைகளை பெற சில ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆகும்.
ரேஷன் அட்டைகள்:
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேஷன் அட்டைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாடு முழுவதும் மக்களுக்கான பல வகையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாகவே மக்களை சென்று அடைகின்றன. மேலும் ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருள்கள் இலவசமாக அல்லது மலிவு விலையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் ரேஷன் அட்டைகளில் சில தவறுகள் இருப்பதால் இந்த சலுகைகள் மக்களுக்கு கிடைக்காமல் போகிறது.
Exams Daily Mobile App Download
அதனால் ரேஷன் கார்டில் தேவையான புதுப்பிப்புகள் செய்வது கட்டாயம் ஆகும். அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநில அரசு , உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை ரேஷன் கார்டுகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி உத்தரப்பிரதேசத்தில் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலமாக மாநிலத்தில் எங்கே இருந்தும் பொருள்கள் வாங்கி கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், உரங்கள், எல்பிஜி என அனைத்து அத்தியாவசிய பொருள்களும் மானிய விலையில் வழங்க பொது விநியோக முறையை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 26 ) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் இந்த முறையை சரியாக பயன்படுத்த ரேஷன் கார்டுதாரர்கள் சில முக்கிய ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயம் ஆகும். அந்த வகையில் வாக்காளர் ஐடி, பான் கார்டு, பாஸ்போர்ட், குடும்ப உறுப்பினரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் அல்லது வங்கி பாஸ்புக் ஆகிய ஆவணங்கள் வைத்திருந்தால் தான் புதிதாக ரேஷன் கார்டு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள சான்று இல்லாமல் இருந்தால் புது ரேஷன் கார்டு அல்லது பழைய ரேஷன் கார்டுகளில் மாற்றம் எதுவும் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.