அக்.25 முதல் மாநிலம் முழுவதும் திரையரங்குகள் திறப்பு – அரசு அனுமதி!
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் விகிதம் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் அக்டோபர் 25ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
திரையரங்குகள் திறப்பு:
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் தினசரி கொரோனா பாதிப்பே 30,000க்கும் அதிகமாக இருந்தது. நாட்டின் மொத்த பாதிப்பில் தினசரி கேரள மாநிலத்தில் மட்டும் 60% பதிவாகி வந்தது. இதனால் கேரள மாநிலத்தில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாநிலத்தின் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதால் தற்போது அரசு பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு போன்ற பல தளர்வுகளையும் அளித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை – ஊரடங்கில் அதிகரித்த சைபர் குற்றங்கள்!
கூடுதலாக திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக திரையரங்குகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் தற்போது மேலும் பல கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர்.
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தேர்வாணையத்தின் அறிவுறுத்தல்கள்!
அதன்படி, திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியினை ரத்து செய்ய வேண்டும். விடுமுறை விடப்பட்ட நாட்களில் மின்வாரியத்தின் வைப்பு நிதியை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே தியேட்டர்களை திறப்போம் என தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பாக அக்டோபர் 22ம் தேதியான நாளை கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் தியேட்டர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.