TNPSC போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தேர்வாணையத்தின் அறிவுறுத்தல்கள்!

1
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - தேர்வாணையத்தின் அறிவுறுத்தல்கள்!
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - தேர்வாணையத்தின் அறிவுறுத்தல்கள்!
TNPSC போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தேர்வாணையத்தின் அறிவுறுத்தல்கள்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC அறிவுறுத்தல்:

தமிழகத்தில் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பது அனைவரின் குறிக்கோளாக இருந்து வருகிறது. தற்போதைய காலத்தில் சீக்கிரம் நிலையான அரசு வேலையை வாங்கி விட வேண்டும் என்ற நோக்கில் மக்கள் செயல்ப்ட்டு வருகின்றனர். முன்பு மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்பவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது போட்டித்தேர்வுகள் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தின் மூலம் அரசு பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அக்.23 முதல் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கம் – சுபமுகூர்த்த நாட்கள் எதிரொலி!

துறைவாரியாக பிரிக்கப்பட்டு குரூப் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா உயிர்க்கொல்லி நோய் தீவிரமெடுத்து வருகிறது. இதனால் எவ்வித அரசு போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது, தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதால் அரசு பணிகள் தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகிறது. அரசு துறைவாரியாக அமைச்சர்களும் காலிப்பணியிடங்களை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • தேர்வாணையத்திள்‌ தெரிவுகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரரிள்‌ தர வரிசைப்படியே
    மேற்கொள்ளப்படுகிறார்கள்
  • பொய்யான வாக்குறுதிகளைச்‌ சொல்லி, தவறான வழியில்‌ வேலை வாங்கித்‌ தருவதாகக்‌ கூறும்‌ இடைத்தரகர்களிடம்‌ விண்ணப்பதாரர்‌ மிகவும்‌ கவனமாக இருக்குமாறு எச்சரிக்கின்றனர்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

  • இது போன்ற தவறான மற்றும்‌ நேர்மையற்றவர்களால்‌ விண்ணப்பதாரருக்கு ஏற்படும்‌ எவ்வித இழப்புக்கும்‌ தேர்வாணையம்‌ எந்தவிதத்திலும்‌ பொறுப்பாகாது.
  • இணையவழி விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்படும்‌ அனைத்துத்‌ தகவல்களுக்கும்‌ விண்ணப்பதாரரே முழுப்‌ பொறுப்பாவார்‌.
  • விண்ணப்பதாரர்‌, தேர்விற்கு இணைய வழியில்‌ விள்ணப்பிக்கும் பொழுது, ஏதேனும்‌ தவறு ஏற்படின் தாங்கள்‌ விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ அல்லது பொதுச்சேவை மையங்களையோ குற்றம்‌ சாட்டக்‌ கூடாது.
  • விண்ணப்பதாரர்‌ பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும்‌ முன்னர் நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!