தொடரும் மின்துறை ஊழியர்களின் போராட்டம் – அரசின் நடவடிக்கை என்ன? ஆளுநர் விளக்கம்!
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கல் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் குறித்து ஆளுநர் தமிழிசையுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.
மின்துறை ஊழியர்கள் போராட்டம்
யூனியன் பிரதேசங்களில் அரசின் கீழ் இயங்கி வரும் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் புதுச்சேரியில் தொடர்ந்து 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவை வம்பாகீரப்பாளையம் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு மாநிலம் முழுவதும் உள்ள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதனால் புதுவை நகரம் புறநகர் மற்றும் கிராமங்களில் மின்சார பணிகள் பாதிக்கப்படுவதாகவும், மின்தடை ஏற்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கோரிமேடு, காலாப்பட்டு, தட்டாஞ்சாவடி, மற்றம் கிராம பகுதிகளில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதால் இது குறித்து ஆளுநர் தமிழிசை அவர்கள் முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். அதில் அவுட் சோர்சிங் முறையில் மின்துறை பணியாளர்களை நியமிப்பது மற்றும் ஓய்வு பெற்ற மின் ஊழியர்களை பணிக்கு அழைத்து பணி செய்ய வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
Office-க்கு வரவேண்டாம்.. இனி Work From Home தான் – ஊழியர்களுக்கு அறிவிப்பு விடுத்த நிறுவனம்!
Exams Daily Mobile App Download
மேலும் போராட்டத்தை நிறுத்துவது குறித்தும், அத்தியாவசிய பணிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களுக்கு எதிராகவும், ஊழியர்களுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் புதுவையில் இருக்காது என தெரிவித்தார். விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து மக்களுக்கு நல்லது நடக்கும் என்பதற்காக மட்டுமே தனியார் மயமாக்க ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு தொந்தரவு இருக்காது என தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்