தொடரும் மின்துறை ஊழியர்களின் போராட்டம்.. அரசு இறுதி எச்சரிக்கை – மீறினால் நோட்டீஸ்!
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கல் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின் துறை ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என இறுதியாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு எச்சரிக்கை
மத்திய அரசு யூனியன் பிரதேசங்களில் இயங்கி வரும் மின்துறையை தனியார் மயமாக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, மின்துறை ஊழியர்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் புதுச்சேரியில் பல கிராமங்களில் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் துணை மின் நிலையங்களில் புகுந்த போராட்ட கும்பல், மின் இணைப்புகளை துண்டித்ததால் மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. அதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்திற்கு இடையேறு ஏற்பட்டது.
நேற்று ஐந்தாவது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வில்லியனுார், ஒதியம்பட்டு, ஆரியப்பாளையம், சிலுக்காரிபாளையம், உளவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதனால் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்தும், ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணி செய்ய அழைத்தும் நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசு பள்ளிகள் CBSE க்கு தரத்திற்கு மாற்றம் – அமைச்சரின் முக்கிய கோரிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும் மாநிலம் முழுவதும் துணை மின் நிலையங்களில் ஆயுதம் தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பவர் கிரீடு அதிகாரிகள் 24 பேர், துணை மின்நிலையங்களின் தானியங்கி பகுதிகளை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் மின்துறை செயலர் அருண் வெளியிட்ட அறிக்கையில், மின் துறை ஊழியர்களின் இச்செயல் சட்டப்படி தண்டனைக்குரியது. மின் துறை என்பது மக்களின் சேவைக்கானது. பொதுமக்களின் சேவையை பாதிக்கும் மின் துறை ஊழியர்களின் போராட்டத்தை அனுமதிக்க முடியாது.மின் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் இந்தியத் தொழில் சட்டம் 1947-இன் படி சட்ட விரோதமானது. அதனால் ஊழியர்கள் உடனே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்