விவாகரத்திற்கு பிறகு பாக்கியாவை வீட்டை விட்டு துரத்தும் கோபி? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக அவரை கோர்டுக்கு அழைத்து சென்றிருக்கும் கோபி, விவாகரத்து பெற்றதும் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தி விடுவது தான் இந்த சீரியலின் அடுத்தகட்ட கதைக்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
ரசிகர்களின் பேராதரவை பெற்று சுமார் 400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாக்கியலட்சுமி’. விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக வெளியாகி வரும் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உண்டு. இந்த காலத்தில் ஒரு குடும்பத் தலைவியின் கதையை, வீட்டில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு பல ஸ்வாரசியங்கள் நிறைந்த கதையம்சத்துடன் எடுக்கப்பட்டு வரும் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மக்களிடம் இருந்து கிளாப்ஸ்களை பெற்று வருகிறது.
‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தேவி பற்றி பாரதி கூறிய ஷாக் தகவல் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மற்ற சீரியல்களின் சாதாரண கமர்ஷியல் கதையை போல அல்லாமல், ஒரு படிக்காத அம்மா செய்யும் தொழில், அதனால் குடும்பத்தில் ஏற்படும் அவமானங்கள், கணவனின் துரோகம், விவாகரத்து ஆன பெண்ணின் நிலை, கணவனை இழந்த பெண்ணின் எதிர்காலம் உள்ளிட்ட சமூகத்திற்கு தேவையான சில விஷயங்களை அழகாக எடுத்துரைத்து வருகிறது. அந்த வகையில் இத்தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள நிகழ்வுகளை திரும்பி பார்க்கையில், பாக்கியாவின் கணவர் கோபி பாக்கியாவின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி அவரை விவாகரத்து செய்வதற்காக கையெழுத்து பெறுகிறார்.
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ ஷபானாவுடன் ஜோடி சேரும் பாரதி – புதிய சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
அதே போல கண்ணை மூடிக்கொண்டு கணவனை உத்தமன் என்று நம்பும் பாக்கியாவும் விவாகரத்து விஷயத்தில் அவருக்கு உடந்தையாக இருக்கிறார். மறுபக்கத்தில் கோபியை பற்றிய உண்மை நிலவரம் எதுவும் தெரியாமல் அவரை நம்புகிறார் ராதிகா. அதே நேரத்தில் எழிலுக்கு, கோபியின் நடவடிக்கைகளில் சந்தேகம் வந்தாலும் அவர் பாக்கியா விஷயத்தில் ஆர்வம் செலுத்துவது போல தெரியவில்லை. இந்தவாறு ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் சென்று கொண்டிருக்க தற்போது கோபி, பொய் சொல்லி ஒரு வழியாக பாக்கியாவை கோர்ட்டுக்கு அழைத்து கொண்டு வருகிறார்.
அங்கு என்ன நடக்கிறது என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத பாக்கியா, நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு அப்பாவித்தனமாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போது கோர்ட்டில் கேட்கும் கேள்விகளை வைத்து பாக்கியா உண்மையை கண்டு பிடித்தால், கோபியை எதிர்த்து கேள்வி கேட்பது போல ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் இருக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. மறுபக்கத்தில் விவாகரத்து கிடைத்தால் கோபி, பாக்கியாவை வீட்டை விட்டு துரத்துவது போல அடுத்த கட்ட கதைக்களம் அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. என்றாலும் கோபி, பாக்கியாவின் விவாகரத்து விஷயத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.