திருமணத்தை நிறுத்த சொல்லும் கோபி, பாக்கியா தான் காரணமா? சீரியலில் அடுத்து வரும் திடீர் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ஈஸ்வரியிடம் ராதிகாவை திருமணம் செய்ய இருப்பது பற்றி சொல்ல, ஆனால் ஈஸ்வரி என்னை மீறி எப்படி திருமணத்தை நடத்துகிறாய் என சவால் விடுகிறார். மறுபக்கம் பாக்கியா தன்னுடைய திருமணத்தில் சமைக்க இருப்பது தெரிந்து கோபி திருமணத்தை நிறுத்த நினைக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ராதிகாவிற்கு எந்த தடையும் இல்லாமல் திருமணம் நடைபெறுமா என்பதே பெரிய ட்விஸ்ட்டாக இருக்க போகிறது. கோபி ஈஸ்வரியிடம் திருமணம் பற்றி சொல்ல வேண்டும் என நினைத்து அம்மாவிற்கு போன் செய்து கோவிலுக்கு வர சொல்கிறார். ஈஸ்வரியிடம் விவரத்தை சொல்ல, உடனே கோவப்பட்ட ஈஸ்வரி என்னை மீறி எப்படி திருமணம் செய்து கொள்வாய் என கோவமாக பேசுகிறார். மறுபக்கம் பாக்கியா கோபியின் மனைவி என தெரியாமல் சந்துரு சமையல் ஆர்டர் கொடுக்கிறார்.
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடில் கோபிக்கு பாக்கியா தான் தன்னுடைய திருமணத்தில் சமைக்க இருக்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. அதனால் கோபி சந்துருவிடம் சென்று இந்த திருமணம் வேண்டாம் என சொல்கிறார். இன்னும் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. இந்த நேரத்தில் ஏன் வேண்டாம் என சொல்கிறீர்கள், உங்க அம்மா எதாவது சொன்னாரா என கேட்க உடனே கோபி அதெல்லாம் ஒன்றுமில்லை, திருமணத்தில் என் மனைவி பாக்கியா தான் சமைக்க போகிறார் என சொல்கிறார்.
தமிழகத்தில் இலவசமாக மருத்துவப் படிப்பில் சேர வேண்டுமா? விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!
Exams Daily Mobile App Download
உடனே சந்துரு அது தான் உங்க மனைவியா என கேட்டு சமையல் காண்ட்ராக்டை மாற்ற சொல்கிறார். பின் பாக்கியா என்ன காரணம் என கேட்க, சந்துரு நான் ராதிகாவின் அண்ணன் என்ற உண்மையை சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைய, எனக்கு வேண்டாம் என்று தான் கோபியை விவாகரத்து செய்தேன். அதனால் திருமணத்தில் சமையலில் எந்த குறையும் வைக்கமாட்டேன். என்னை நம்பி நீங்கள் ஆர்டர் கொடுக்கலாம் என சொல்ல சந்துரு மனம் மாறுகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்