ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பென்சன் தொகை ரூ.9000 ஆக உயர்வு!
வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்ஷன் தொகை 9000 ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPFO:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வருகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெறும் பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டித்தொகை பிஎஃப் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவ்வப்போது ஈபிஎஃப்ஓ இதில் மாற்றங்களை அறிவித்து வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA அதிகரிப்பு – சம்பள உயர்வு குறித்த கணக்கீட்டு விவரங்கள் இதோ!
ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும். பிஎப் கணக்குதாரர் தனக்கென நாமினியை தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்புசாரா துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை 9,000 ரூபாயாக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (ஜன.17) பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
சென்ற 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமே குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்த நிலையில் தற்போது தான் அவற்றை நடைமுறை படுத்துவதற்கான வேலைகளை EPFO அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது குறைந்தபட்ச பென்ஷன் தொகை 9,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதால் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது…..எனினும் இதன் உண்மைத்தன்மை கேள்விக்குறி யதாக உள்ளது….
நிதி நிலை அறிக்கையில் குறைந்த பட்ச ஓய்வூதியம் உயர்த்தி. வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என்று நம்புகிறோம்….
அகில இந்திய அளவில் 60 லட்சம் குடும்பம் எதிர்பார்த்து காத்து நிற்கும் நிலையில் பல்வேறு செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருவது. …ஆறுதல் அளிக்கிறது ..