மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA அதிகரிப்பு – சம்பள உயர்வு குறித்த கணக்கீட்டு விவரங்கள் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA அதிகரிப்பு - சம்பள உயர்வு குறித்த கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA அதிகரிப்பு - சம்பள உயர்வு குறித்த கணக்கீட்டு விவரங்கள் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA அதிகரிப்பு – சம்பள உயர்வு குறித்த கணக்கீட்டு விவரங்கள் இதோ!

தற்போது வெளிவந்துள்ள 7வது ஊதியக்குழுவின் தகவல் படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வை அடுத்து சம்பளத்தில் மீண்டும் பம்பர் உயர்வு இருக்கப்போவதாக தெரிகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது துவங்கி இருக்கும் புத்தாண்டின் முதல் மாதத்தில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட 31% அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2022 இல், அகவிலைப்படி தொகையை மீண்டும் ஒருமுறை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஊழியர்களின் சம்பளத்தில் மீண்டும் பம்பர் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது ஃபிட்மென்ட் பேக்டர் தொடர்பாக ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (ஜன.17) பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!

அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி அதிகரித்தால், அவர்களின் அடிப்படை சம்பளம் கணிசமாக உயரும். இருப்பினும், எந்த அளவுக்கு அகவிலைப்படி (DA) உயர்த்தப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) தரவுகளின்படி, DA தொகை 2 முதல் 3% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி தொகை வழங்கப்படுகிறது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

தொடர்ந்து ஜனவரியில் 2% முதல் 3% வரை DA தொகை அதிகரித்தால், ஊழியர்களுக்கு 33 முதல் 34 சதவிகிதம் வரை DA தொகை கிடைக்கும். அதாவது, மீண்டும் ஒரு முறை ஊழியரின் சம்பளம் அதிகரிக்கும். இது தவிர டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய மையத்தின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும். இது தவிர, 2022 பட்ஜெட்டுக்கு முன் ஃபிட்மென்ட் காரணி குறித்தும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவெடுக்கலாம். இது நடந்தால் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியமும் உயரும். ஆனால், தற்போது AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அகவிலைப்படியைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இப்பதிவில் காணலாம்.

ஜூலை 2021 முதல் DA:

  • மாதாந்திர மதிப்பெண்கள் DA சதவீதம்
  • ஜூலை 2021 – 353 31.81%
  • செப்டம்பர் 2021 – 355 32.81%
  • நவம்பர் 2021 – 362.016
  • டிசம்பர் 2021 -?

DA கணக்கீடு:

  • ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
  • ஆகஸ்டு மாதத்திற்கான கணக்கீடு – 123X 2.88 = 354.24
  • செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
  • நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு – 125.7X 2.88= 362.016

34% DA இல் கணக்கீடு:

அகவிலைப்படி தொகை 3% ஆக அதிகரித்த பிறகு, மொத்த DA தொகை 34% ஆக ஏற்றம் காணும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி தொகை ரூ.73,440 ஆக இருக்கும். ஆனால் வித்தியாசத்தைப் பற்றி பேசினால், சம்பளம் ஆண்டுக்கு ரூ.6,480 அதிகரிக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தின் கணக்கீடு:

  • பணியாளரின் அடிப்படை ஊதியம் – ரூ.18,000
  • புதிய அகவிலைப்படி (34%) – ரூ.6120/மாதம்
  • இன்று வரை உள்ள அகவிலைப்படி (31%) – ரூ.5580/மாதம்
  • அகவிலைப்படி 6120- 5580 = ரூ.540/மாத அதிகரிப்பு.
  • ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ.6,480
  • அதிகபட்ச அடிப்படை ஊதியத்தின் கணக்கீடு:
  • பணியாளரின் அடிப்படை ஊதியம் – ரூ 56900
  • புதிய அகவிலைப்படி (34%) – ரூ.19346/மாதம்
  • இன்று வரையிலான அகவிலைப்படி (31%) – ரூ 17639/மாதம்
  • 19346-17639 இலிருந்து அகவிலைப்படி அதிகரிப்பு – ரூ 1,707/மாதம்
  • ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!