தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் (ஜன.17) பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 17.01.2022 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் போகியில் ஆரம்பித்து காணும் பொங்கல் என மொத்தம் 4 நாட்கள் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். இப்பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து பணி செய்பவர்கள் தங்களின் குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாட வருகை புரிவர். இவர்களின் வசதிக்காக அரசு சார்பாக சிறப்பு மற்றும் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். மற்ற ஆண்டுகளை தொடர்ந்து 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட்டது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
இதனை முன்னிட்டு ஜன.14 – பொங்கல் பண்டிகை, ஜன.15 – மாட்டு பொங்கல், ஜன.16 காணும் பொங்கல் என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஜன.16 மக்கள் அனைவரும் ஊர் திரும்பும் நிலையில் அன்று ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் 18ம் தேதி அன்று தைப்பூச திருவிழா அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று மட்டும் பணி நாளாக இருந்தது. இந்த நிலையில் 17ம் தேதி அன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 18ம் தேதியும் தைப்பூசத்தை ஒட்டி பொது விடுமுறையாகும். அதனால் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. அதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.