இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைப்பது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரம்
இந்தியாவிற்கு மீண்டும் கச்சத்தீவை ஒப்படைப்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவை மீட்க இந்தியா அனைத்து விதமான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.
ICMR நிறுவனத்தில் மாதம் ரூ.28,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
அதாவது இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவிற்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு வழங்கினால் இலங்கையின் கடல் வளம் முற்றிலும் அழிந்துவிடும். இது குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசி தீர்வு காணப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.