ஆதார் துறையின் கீழ்வரும் UIDAI நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Account Officer, Accountant ஆகிய பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் 28.04.2024 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Senior Account Officer, Accountant |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.04.2024 (Updated) |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஆதார் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Senior Account Officer, Accountant ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ளது.
- இந்த ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் CA, MBA, B.Com பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் Pay Matrix Level – 3 / 4 / 8 / 9 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் விவகாரம் – இலங்கை அமைச்சர் விளக்கம்!
- விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
- இந்த ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.27,500/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
UIDAI விண்ணப்பிக்கும் முறை:
இந்த ஆதார் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட இறுதி நாள் 28.03.2024 அன்றிலிருந்து 28.04.2024 ஆக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.