அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த அரசு – 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

0
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த அரசு - 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த அரசு - 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த அரசு – 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சரிவை சீரமைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ல் இருந்து 60 ஆக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு வயது குறைப்பு:

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார சரிவை அதிபர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்தின் விளைவால் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி வேறு நாட்டில் தஞ்சம் அடைந்து விட்டார். அதன்பிறகு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் அதிபராக பதவியேற்றார். புதிய தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல அரசு அனுமதி அளித்தது. அவர்களுக்கு ஊதியமில்லா விடுப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது புதிய அறிவிப்பாக, அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகை 2.21 கோடியில் அரசு ஊழியர்கள் 16 லட்சம் என்ற எண்ணிக்கையில் உள்ளனர். மேலும், 6.72 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். நாட்டின் மொத்த வருவாயில் 75% அளவிற்கு இவர்களுக்கு சம்பளம் வழங்கவே செலவாகி விடுகிறது.

ரயில் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் – இதை மீறினால் ஆபத்து தான்!

Exams Daily Mobile App Download

இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 65ல் இருந்து 60 ஆக குறைத்து இலங்கை அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பானது டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்போது கிட்டத்தட்ட 25,000 முதல் 20,000 வரையிலானவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாட்டின் 16 லட்சம் அரசு ஊழியர்களில் 10 லட்சம் ஊழியர்கள் சரிவர செயல்படுவதில்லை என்று அரசு குற்றம் சாட்டி இருந்த நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கு ஆகும் செலவினை குறைக்கும் நடவடிக்கையாக 15 லட்சம் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அரசு 10 லட்சமாக குறைக்க உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!