தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? பொது மக்கள் ஏமாற்றம்!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைகளை அடமானம் வைத்தவர்கள் தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காது என்பதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் அளவிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் இவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிலவிய பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டது. அதனால் நிபந்தனைகள் கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களில் 37 வகையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு நகைக்கடன் தகுதி பெறுவோர், தகுதியற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
பான், ஆதார் கார்டு இணைக்காதோர் கவனத்திற்கு – ‘இதை’ செய்யாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்!
இதில் ஏராளமானோருக்கு நகை கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை தகுதியற்றோர் பட்டியலில் இருந்தனர். அதனால் அரசு எவ்வித நிபந்தைகளும் இன்றி அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நகை அடகு வைத்தவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நேரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அரசியல் கட்சியினர் நகைக்கடன் தள்ளுபடி வழங்காததை கண்டித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்றது.
ஏப்ரல் 5 முதல் மதுரை சித்திரை திருவிழா துவக்கம் – 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி!
இந்த நிலையில் கோனேரி கோட்டை கூட்டுறவு சங்கத்தில் 5 சவரனுக்கு நகை அடகு வைத்தற்கான ஆவணங்களை காட்டி நகைகளை திரும்ப கேட்டால் உங்கள் பெயர் பட்டியலில் இல்லை என்று ஊழியர்கள் கூறுகிறார்கள் எனவே இது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நகை அடமானம் வைத்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து நகை கடன் தள்ளுபடிக்கான சிறப்பு தணிக்கை இன்னும் முடிக்கப்படவில்லை இந்த வாரத்திற்குள் ஆய்வு பணி முடிந்து பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரி கூறியுள்ளார்.